பிறந்து 28 நாட்களான பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அந்தேரிகொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னமுத்து-சாலம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து மீண்டும் கர்ப்பம் தரித்து கடந்த 30 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிறந்த குழந்தை மர்மமான முறையில் இறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நூலஅள்ளி கிராம நிர்வாக […]
