கவுன்சிலராக பதவி ஏற்ற 28 நபர்கள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததில் கடலூர் மாநகராட்சியில் 45 இடங்களில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். இன்று மேயர் மற்றும் துணை மேயருக்கான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் தி.மு.க சார்பில் மேயர் பதவிக்கு சுந்தரி என்பவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் தாமரைச்செல்வன் என்பவர் துணைமேயர் பதவிக்கும் போட்டியிட்டுள்ளனர். […]
