மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், புனேவில் வரும் 28ஆம் தேதிவரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 11 மணிக்கு மேல் ஒட்டல் மற்றும் உணவகங்கள் செயல்பட தடைவிதித்துள்ள மாவட்ட நிர்வாகம், திருமண விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 200 பேர்வரை மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. இதனிடையே நாக்பூர், அமராவதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க, இரவு நேரத்திலும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் உத்தவ் […]
