நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு ஆந்திராவில் இருந்து 2,600 டன் மக்காசோளம் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,600 டன் மக்காசோளம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கலுக்கு […]
