நேபாளத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் உலகின் மிகப்பெரிய மலையான எவரெஸ்ட் சிகரத்தில் 26 முறை ஏறி சாதனை படைத்துள்ளார். உலகின் உயரமான மலை சிகரங்களை கொண்டது நேபாளம். கொரோனா தொற்று காரணமாக மலை ஏறுவதற்கு வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முதல் மீண்டும் மலை சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்டில் மலை ஏற மொத்தம் 316 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியிருந்தது. […]
