கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 18¼ டன் காய்கறிகளும், 7¼ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். […]
