சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக போலீசார் 24 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு வேப்பங்கொட்டை பாளையத்தில் பணத்தை வைத்து சீட்டாட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகவும், விடுமுறை தினங்களில் வெளியூரில் இருந்து ஆட்கள் வந்து இந்த சீட்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் புகாரானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
