நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் ஏதேனும் அவரச தேவைகள் ஏற்பட்டால் காவல்துறை உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என சூப்பிரண்டு அதிகாரி சக்தி கணேசன் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பால் விநியோகம், மருந்துக்கடைகள், நாட்டு மருந்து கடைகள், குடிநீர் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மளிகை பொருட்கள் யாவும் தோட்டக்கலைத் […]
