10 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காணாமல் போய் விட்டதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் கொரோனா ரேபிட் டெஸ்ட் நடத்திய பின்னர், கடந்த 10 நாட்களில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.. இதில் கொடுமை என்னவென்றால், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் அனைவருமே சோதனைக்கு வரும்போதே போலி முகவரியும், போலி தொலைபேசி எண்ணும் கொடுத்ததால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை […]
