நைஜீரியாவில் உள்ள பள்ளியில், மர்மநபர்கள் நுழைந்து சுமார் 200 மாணவர்களை கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் நைஜர் நகரத்தில் இருக்கும் தெகினாவில் இஸ்லாம் தொடர்பான கல்வி கற்றுக்கொடுக்கும் சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளி இயங்கிவருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென்று, இந்த பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சுமார் 200 மாணவர்களை அங்கிருந்து மர்மநபர்கள் கடத்தி சென்றுள்ளார்கள். ஆனால் காவல்துறையினர் கடத்தப்பட்ட […]
