அந்தியோதயா ரயில் 20 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை வந்தடையும். இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.20 மணிக்கு வந்து சேருமாறு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதன்பிறகு 20 […]
