ஐ.நா சபை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 20 மில்லியன் டாலர்கள் அளிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாடு, வறுமை மற்றும் போர் காரணமாக கடும் பாதிப்படைந்துள்ளது. எனவே அந்நாட்டு மக்களுக்கு உதவ ஐ.நாவின் மத்திய அவசரகால உதவிக்கான நிதியிலிருந்து சுமார் 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா சபை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்த வருடம் மட்டும் 606 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. அதனை, அந்நாட்டிற்கு கொடுத்து உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் […]
