தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு பாக்கெட் செய்யும் பணிகள் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழ் அகதிகளுக்கு உணவு பொருட்கள் அடங்கிய பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பில் 20 வகையான பொருள்கள் உள்ளது. […]
