வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாமரை நகரில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதனை அடுத்து வரும் மாதமான நவம்பரில் ராஜசேகரின் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக […]
