கட்டிட சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் கடந்த 2013-ஆம் வருடம் இலங்கை அகதிகளுக்காக 130 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடுகளில் இலங்கை அகதிகள் எவரும் வசிக்கவில்லை. இந்நிலையில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக கட்டப்பட்ட இந்த வீடுகள் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்து கிடந்துள்ளது. இதனையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் புவனேஸ்வரன், […]
