வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வைப்பூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூர் அருகாமையில் இருக்கும் குலதீபமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பவானி என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பவானியின் நடத்தையில் சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]
