கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை உள்ள ரங்காபுரம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட 2 பேரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் 2 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜோதிகுமரன் மற்றும் தமிழ்செல்வி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் […]
