மோட்டார் சைக்கிளின் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய முளை வாயல் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவருடன் மீஞ்சூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து […]
