மது பாட்டில்கள் விற்பனை செய்த மாமனார் மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு உப்பிலியபுரம் பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் மது விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக முருகேசன் என்பவரையும் அவரது […]
