லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் 2-வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திக் பிரபு என்பவர் சட்ட உதவியாளராகவும், தனலட்சுமி என்பவர் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் காப்பகத்தில் இருக்கும் குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு இருவரும் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் […]
