காஞ்சிபுரத்தில் அலட்சியமாக வாகனம் ஒட்டி 2 வயது குழந்தையை கொன்ற பள்ளி வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை அடுத்த பெருநகர் புது காலனியில் வசித்து வருபவர் அருணகிரி. இவரது மகன் புனிதன். மகள் பொன்மதி. மகன் உத்திரமேரூர் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். பொன்மதி 2 வயது குழந்தை. இந்நிலையில் பொன்மதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது புனிதனை இறக்கிவிட வந்த பள்ளி வாகன ஓட்டுநர் பொன்மதியை […]
