எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 2 விசைப்படகு மற்றும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500க்கு அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் கச்சதீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துகொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் […]
