அனுமதி இல்லாமல் மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் கோடாலிகருப்பூர் பகுதியில் சோதனை ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு இரண்டு பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மணல் […]
