கோவில் சுவர் இடிந்து விழுந்ததால் சிறுவன் உள்பட 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டித்துறை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான நடராஜ்(50), முருகனின் மகன் ஹரி(13), நிதிஷ்(11), பிரபு(35), நிர்மல்(14) ஆகியோர் மழையில் நனையாமல் இருக்க கோவில் சுவர் ஓரம் ஒதுங்கி நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் […]
