முன்பகை காரணமாக 2 பெண்களை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வெள்ளையாபுரம் பகுதியில் ஞானவரம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ஞானவரத்தின் மனைவி சோலையம்மாள் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த பாலமுருகன் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன் தன் […]
