பட்டப்பகலில் இரண்டு பெண்களை தாக்கி நகைகளை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்புதூர் கிராமத்தில் கோமதி என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் சாந்தா என்பவரும் உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கோமதி மற்றும் சாந்தாவை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]
