ஜெர்மனியை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் தனது வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்த மற்றொரு நாயின் உரிமையாளரான 27 வயதுடைய பெண்ணொருவர் நாயை எதற்காக அடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சண்டையில் 57 வயதான பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் அந்த 27 வயதுடைய பெண்ணின் காலில் கடித்து காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. […]
