இரண்டாம் உலக போரில் மரணமடைந்த தங்களது முன்னோர்களின் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு ரஷ்ய மக்கள் இன்று ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா, ஹிட்லரின் நாஜி படைகளை எதிர்த்து போரிட்டது. இந்த போரில் ரஷ்யா வெற்றி கண்டது. அதன் நினைவாக மாஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஒன்பதாம் தேதி அன்று ராணுவ அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்த வருடம், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையிலும் வெற்றி நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதன்படி, […]
