பள்ளிக்கூட மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியை உட்பட இருவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் முள்ளம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கின்ற கழிப்பறையை ஒரு மாணவன், ஒரு சிறுமி சுத்தம் செய்கின்ற வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோவை பார்த்து பல்வேறு […]
