பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்குளி அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துபாலன் என்ற மகன் உள்ளார். இவர் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே காவல்துறையினர் முத்துபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று நாங்குநேரி அருகில் உள்ள தம்புபுரம் பகுதியில் காளிகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் […]
