துப்பாக்கிகள் தயாரித்த வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் போலீசார் வாகன சோதனை நடத்திய பொழுது இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட இருவரிடம் இருந்து இரண்டு கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்தார்கள். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் ஏற்காடு அடிவாரம் கருங்காலி என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து […]
