தமிழகத்தில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மருத்துவத் தேவைகள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஆதாரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம் .11 மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி […]
