தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தும்மக்குண்டு பகுதியில் ஜெயக்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி தற்போது கர்ப்பமடைந்த நிலையில் பிரசவத்திற்கு தேனி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு 17 வயது என்பதை அறிந்த மருத்துவர்கள் ஆண்டிபட்டி […]
