புதுச்சேரி அரசு அலுவலகங்களில் 17 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிதி துறை வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த மே மாதம் 17ஆம் தேதி தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரசுத்துறைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் அரசு துறைகளில் தடை விதிக்கப்பட்டது. அதன்படி […]
