லாரியில் 16 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் வேலூர் மாவட்டம் வழியாக தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கலெக்டர் சன்முகசுந்தரத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், பறக்கும் படை தாசில்தார் கோடிஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஒரு லாரி அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அதனை மடக்கி டிரைவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது […]
