புரட்சித் தாய் சின்னம்மாவின் காலில் விழுந்து அழைத்ததை மறந்து விட்டு ஜெயக்குமார் பேசுவதாக அஇஅதிமுக முன்னாள் நிர்வாகி திரு புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு முரணாக பேசுவதற்கு கேபி.முனுசாமி க்கு எந்த அருகதையும் இல்லை என்றும் அவர் அப்போது தெரிவித்துள்ளார். அன்று எல்லோரும் வாக்களித்துதான் பொதுச்செயலாளராக விகே. சசிகலாவை தேர்ந்தெடுத்தோம். காலில் விழுந்து அழைத்தோம். அதை மறந்து விட்டு மறுபடியும் அதே கதையை பேசுகிறார். இன்னொருவர் இறந்து விடுவதாக கூறுகிறார். அவர் யார் என்றால்? […]
