கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாட்டில் மிக மோசமாக பரவி வருகிறது. இந்நிலையில் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து அனைத்து மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு 15% மேல் இருந்தால் […]
