சிவகங்கையில் நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் பகுதியிலிருந்து கோவிலூர் பகுதியில் உள்ள நெல் குடோனுக்கு 150 நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காரைக்குடியில் உள்ள வாட்டர் டேங்க் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் லாரி டிரைவர் பதறியடித்து வண்டியை விட்டு இறங்கி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து […]
