வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், நவம்பர் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியிருக்க தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வருகின்ற 10, 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். […]
