ஆளும் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் துணைநிலை ஆளுநராக வி.கே சக்சேனா என்பவர் இருக்கிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக இருந்தார். அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடந்தபோதுசக்சேனா 1400 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
