அதிக பாரம் ஏற்றி சென்ற 14 லாரிகளை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 14 லாரிகளை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து 2 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
