சிவகங்கை சிங்கம்புணரியில் முககவசம் அணியாமல் சென்ற 14 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் பல்வேறு இடங்களில் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரியில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. […]
