17 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் சாராய வியாபாரிகளிடம் தொடர்ந்து வசூல் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சித்திரவேல் தலைமையிலான காவல்துறையினர் மதுவிலக்கு காவல்நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூபாய் நோட்டுகள் சிறிய பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 75,630 ரூபாய் […]
