சீன அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்வதை ஒரு நாடு தடுத்ததாக பாகிஸ்தான் இந்தியாவை மறைமுகமாக குற்றம் சாட்டியிருக்கிறது. 14-ஆம் பிரிக்ஸ் மாநாடானது கடந்த 23ஆம் தேதியன்று சீனாவின் தலைமையில் பீஜிங் மாகாணத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ளவிடாமல் தங்களை ஒரு நாடு தடுத்ததாக பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் கூறியதாவது, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பிரிக்ஸ் நாடுகளின் 14ஆம் உச்சிமாநாட்டில் உலக வளர்ச்சி […]
