தமிழகம் முழுவதிலும் 132 ஜவுளி கடைகள் மற்றும் அவை தொடர்புடைய நிறுவனங்களில் நேற்று வணிக வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள். தமிழக வணிக வரியை பெருக்குவதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரி ஏய்ப்பு செய்வதை கண்டறிந்து அரசுக்கு வர வேண்டிய முறையான வரியை வசூல் செய்து வருகின்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி .மூர்த்தி அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதிலும் நேற்று சோதனை நடந்தது. […]
