வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் தங்க நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மட்லாம்பட்டி கிராமத்தில் வெங்கிடியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டிற்குள் சென்று வெங்கிடியம்மாவை மிரட்டி மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து வெங்கிடியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
