சேலம் மாவட்டத்தில் 13¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலெக்டர் கார்மேகம் கூறியது , “சேலம் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. […]
