பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர் கனமழையால் 7 அணைகள் உடைந்ததில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளின்றி திறந்த வெளியிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏறக்குறைய அனைத்தும் சேதமடைந்து விட்டன என்று ஏ.ஆர்.ஒய். நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாகாண […]
