கடலில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவின் மேற்குப்பகுதியில் டுமாக்கோ என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. டுமாக்கோ துறைமுக நகரம் அருகில் கடலில் இரண்டு படகுகள் சென்றுகொண்டிருந்தது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட 50 பேர் இந்த இரண்டு படகுகளிலும் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று படகுகள் கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால் 2 படகில் இருந்தவர்களும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் […]
