தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென தோட்டத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாடுகாணி வனத்துறையினர் […]
